×

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி அதிமுக மாஜி அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு திடீர் வாபஸ்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சரோஜா. இவர் மீது அவரது உறவினர் குணசீலன், கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் மோசடி புகார் அளித்தார். அதில், சரோஜா அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.76 லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரிவித்திருந்தார். இதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே சரோஜாவும் அவரது கணவரும் முன்ஜாமீன் கேட்டு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று காலை சரோஜாவின் வழக்கறிஞர் ஆஜராகி முன்ஜாமீன் மனுவை திரும்பப்பெற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து, சரோஜா மற்றும் அவரது கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : AIADMK ,Saroja Munjamin , AIADMK ex-minister Saroja Munjamin's abrupt withdrawal of fraudulent offer to buy government job
× RELATED தமிழக அரசு உடனடியாக பழைய பேருந்துகளை...